Thursday, December 4, 2008

பிரஸ் மீட் பண்றார் கலைஞர் !


எல்லாவற்றுக்கும் யார் மீதாவது பழி போட வேண்டும் என்பதுதான் இன்றைக்கு எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அல்லது ஆட்சியாளர்களுக்கும் கைவந்த கலையாக இருக்கிறது.

இதோ நம்ம கலைஞர் மட்டும் சளைத்தவரா!

ஒரு சாம்பிள்...

நிருபர்: உங்க ஆட்சியில நிறைய ஊழல் நடக்குதுன்னு சொல்றாங்களே..?

கலைஞர்: யார் நீ ...எந்தப் பத்திரிகை. ஏன் சீனியர் ரிப்போர்ட்டர் வரலை...

நிருபர்: சார்... நான் தப்பா ஒண்ணும் கேக்கலியே..

கலைஞர்: என்னய்யா தப்பு ரைட்டைக் கண்ட... உன்னை அம்மையார் காசு கொடுத்து அனுப்பிச்சாரா.. இந்தக் கேள்விய ஜெயலலிதா கிட்ட கேக்க முடியுமா உன்னால...

வேறு மூ...த்த நிருபர்: சரிங்கய்யா... இதுக்கு என்ன பதில் எழுதிக்கலாம்...

கலைஞர்: அம்யார் ஆட்சிக்கால உழலோடு ஒப்பிட்டால் கழக ஆட்சியின் மேன்மை புரியும்னு எழுதுய்யா...

ஊழல் பற்றிய கேள்விக்கு இப்படி பதிலளிப்பார் என்றால், தீவிரவாதம் பற்றிய கேள்விக்கு தானைத் தலைவரிடமிருந்து என்ன மாதிரி பதில் வரும்... 

இதற்கான பதில் அறிய, மேலே உள்ள துக்ளக் கருத்துப் படம் உங்களுக்கு உதவக் கூடும்!

-எஸ்.எஸ்.

1 comment:

கிரி said...

உங்கள் புதிய வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள்